உலக வரைபடத்திலிருந்து ரஷ்யாவை அழிக்க மேற்குலக நாடுகள் சதி!!!

உலக வரைபடத்திலிருந்து ரஷ்யாவை அழிக்க மேற்குலக நாடுகள் சதி!

ரஷ்யாவை தனியாக பிரிப்பதற்கு மேற்குலக நாடுகள் முயற்சிப்பதாக கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யா இப்போது உக்ரைனில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணியுடன் சண்டையிட்டு வருவதாகவும், மேற்கத்திய நாடுகள், நாட்டை தொடர்ந்து அழித்து வருவதாகவும் ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலய்(Nikolai) தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடைபெறும் நிகழ்வுகள் மொஸ்கோவிற்கும், கிய்விற்கும் இடையிலானவை அல்ல எனவும், ரஷ்யாவிற்கும், நேட்டோவிற்கும் இடையில் நடைபெறும் மோதல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக அரசியல் வரைப்படத்தில் இருந்து ரஷ்யாவை அழிப்பதே மேற்கத்திய நாடுகளின் திட்டம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

பிரித்தானியா,பிரான்ஸ் மீது கடும் கோபம் கொண்டுள்ள ரஷ்யா

ரஷ்யா உக்ரைன் போரில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவருவதையடுத்து, பிரான்ஸ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளார்கள். பிரான்ஸ் என்ற நாடே இருக்கக்கூடாது என்று ரஷ்யாவின் ஓய்வு பெற்ற தளபதியான Andrey Gurulyov என்பவர் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.மேலும் பிரான்சையோ அல்லது பிரித்தானியாவையோ அழிக்கும் அளவுக்கு தங்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.